Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவர் புயல் எங்கு கரையை கடக்கும்? வெதர்மேன் ரிபோர்ட்!!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (08:10 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் குறித்து தமிழக வெதர்மேன் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். 
 
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகிறது என்பதை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. தற்போது சென்னையில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி இன்றிரவு கரையை கடைக்கும் என கூறப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இது குறித்து தமிழக வெதர்மேன் கூறியுள்ளதாவது, இந்த புயல் வலுவிழந்தால் அது டெல்டா பக்கம் திரும்பலாம். ஆனால், இது தீவிரமாக இருப்பதால் டெல்டா பக்கம் திரும்ப வாய்ப்பு இல்லை. மகாபலிபுரத்துக்கும் சென்னைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இல்லை என்பதால் சிறிறு மாற்றம் என்றாலும் இந்தபுயல் சென்னையில் கரையை கடக்கலாம். 
 
இதனால், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமழை மற்றும் வேலூருக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments