Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! 4 நாட்களுக்கு நல்ல மழை!

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (15:04 IST)
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. சமீபத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டல மாண்டஸ் புயலாக வலுவடைந்து கரையை கடந்தது.

இந்நிலையில் தற்போது கேரளா – கர்நாடகா கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”கேரளா – கர்நாடகா கடலோரப்பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்

டிசம்பர் 14 முதல் 17ம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமானது வரை தொடர் மழைப்பொழிவு இருக்கும்” என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments