Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கோயில்களை திறக்க அனுமதி.. ஆனால்..? – தமிழக அரசு நிபந்தனை!

Webdunia
புதன், 20 மே 2020 (10:53 IST)
தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்களை திறக்க தொடர்ந்து பலர் கோரிக்கை வைத்த நிலையில், சில நிபந்தனைகளுடன் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் என அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிந்து தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 உடன் முடியும் நிலையில் ஜூன் 1 முதல் தமிழகத்தில் முக்கியமான பெரிய கோவில்களை மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 40 ஆயிரம் கோவில்களிலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் வழிபாட்டிற்கு செல்லும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முகக்கவசங்கள் அணிவதும் கட்டாயம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments