Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 ஆயிரம் டன் அரிசி, 60 டன் மருந்துகள்! – இலங்கை புறப்பட்டது தமிழக நிவாரண கப்பல்!

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (11:53 IST)
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தவித்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் இரண்டாவது கட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகமான நிலையில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் உணவுக்கே அல்லாடிய நிலையில் கொதித்தெழுந்த மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசின் அனுமதி பெற்று முதற்கட்டமாக அரிசி, உணவு பொருட்கள் மற்றும் மருந்துகளை தமிழ்நாடு அரசு கடந்த மாதம் இலங்கைக்கு கப்பல் மூலமாக அனுப்பி உதவியது.

இலங்கையில் இன்னமும் இயல்பு நிலை திரும்பாத நிலையில் தமிழ்நாடு அரசு இரண்டாம் கட்ட நிவாரண உதவிகளை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. 14,700 டன் அரிசி, 250 டன் பால் பவுடர், 60 டன் மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்கள் கப்பல் மூலமாக இன்று தூத்துக்குடி துறைமுகம் வழியாக அனுப்பப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments