Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் தமிழக பள்ளிகளுக்கும் விடுமுறை: அதிரடி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (20:10 IST)
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கேரளா, புதுவை, டெல்லி உள்பட ஒருசில மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முழு ஆண்டு தேர்வுகளும் ஒரு சில வகுப்புகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
முன்கூட்டியே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதன் மூலம் கொரோனா வைரசை மாணவர்களுக்கு தொற்றாமல் கட்டுப்படுத்தலாம் என்பது அரசுகளின் எண்ணமாக உள்ளது 
 
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதால் பள்ளிகளுக்க்8உ விடுமுறை அளிக்க வாய்ப்பு இல்லை என்று சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில் தமிழக அரசு தனது வாதமாக வைத்தது
 
இந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எல்கேஜி யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 16 ஆம் தேதி முதல் 31ம் ஆம் தேதி வரை விடுமுறை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
இதனை அடுத்து வரும் திங்கள் முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments