தமிழகத்திற்கு மேலும் 4 லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்தன! – சப்ளை செய்யும் பணிகள் தீவிரம்!

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (11:45 IST)
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவிய நிலையில் இன்று மேலும் 4 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தடுப்பூசியில் முன்கூட்டியே 20 லட்சம் தடுப்பூசிகளை அவசரமாக வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இந்நிலையில் நேற்று மாலை 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வந்தடைந்தன.

இந்நிலையில் தற்போது மேலும் 2 லட்சம் கோவாக்சின் மற்றும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்தடைந்துள்ளதாக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை வந்துள்ள இந்த தடுப்பூசிகள் தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பபடும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments