Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு? – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (08:40 IST)
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த சில நாட்களாக பல பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து வந்த நிலையில் இன்றும் சில மாவட்டங்களின் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் மழை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments