Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்திற்கு 2 நாட்கள் வறண்ட வானிலைதான்! – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்திற்கு 2 நாட்கள் வறண்ட வானிலைதான்! – வானிலை ஆய்வு மையம்!
, திங்கள், 3 ஜனவரி 2022 (11:59 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்த நிலையில் 2 நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வளிமண்டல சுழற்சியால் பல இடங்களில் கனமழை பெய்தது. சென்னையில் முன்னறிவிப்பின்றி கடும் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று தமிழகத்தின் தென் கடற்கரையோர பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கொள்ளை! – தனிப்படை அமைத்த போலீஸார்!