Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக ஆளுனருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! – 150 பேர் கைது!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (12:28 IST)
இன்று மயிலாடுதுறை சென்ற தமிழக ஆளுனருக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்த 150க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி அரசு முறை பயணமாக இன்று காஞ்சிபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஆளுனர் நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பாததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுனர் செல்லும் வழியில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளுனர் செல்லும் வழியில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்திய 150க்கும் மேற்பட்ட நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு எழுந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments