Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலவரத்திலும் ஓர் நெகிழ்ச்சி சம்பவம்: தமிழகத்தில் கன்னடர்களுக்கு பூரண கும்ப மரியாதை!

கலவரத்திலும் ஓர் நெகிழ்ச்சி சம்பவம்: தமிழகத்தில் கன்னடர்களுக்கு பூரண கும்ப மரியாதை!

கலவரத்திலும் ஓர் நெகிழ்ச்சி சம்பவம்: தமிழகத்தில் கன்னடர்களுக்கு பூரண கும்ப மரியாதை!
, செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (17:50 IST)
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து கர்நாடகத்தில் பெரும் கலவரம் வெடித்துள்ளது. தமிழகத்திலும் ஆங்காங்கே அசம்பாவிதங்கள் நடந்தன.


 
 
இதனையடுத்து இரு மாநில மக்களும் ஒருவருக்கொருவர் எதிரையை போல நடந்துகொள்ளும் சூழல் நிலவி வருகிறது. தமிழர்களின் வாகனங்களை தாக்குவதும், எரிப்பதும், தமிழக மக்கள் மீது தாக்குதல் நடத்துவது என கர்நாடக மக்கள் அத்துமீறி நடந்துகொள்கின்றனர்.
 
ஆனால் தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்கு வந்த கர்நாடக பக்தர்களை தமிழக மக்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்ற நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
 
காவிரி பிரச்சனை தொடர்பாக இரு மாநிலங்களிலும் நிலவும் கலவர போக்கு மாறி அமைதியும், ஒற்றுமையும்  ஏற்படுத்த வழிபாடு செய்ய ராமேஸ்வரம் வந்த கர்நாடக பக்தர்களை பூரணகும்ப மரியாதை கொடுத்து ராமேஸ்வரம் இந்து மக்கள் கட்சியினர் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சுவாமி தரிசனம் செய்த கர்நாடக பக்தர்களை அவர்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பந்த்தா.. அப்டீனா? : அந்த பல்டி அடித்த வாட்டாள் நாகராஜ்