Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பந்த்தா.. அப்டீனா? : அந்தர் பல்டி அடித்த வாட்டாள் நாகராஜ்

பந்த்தா.. அப்டீனா? : அந்தர் பல்டி அடித்த வாட்டாள் நாகராஜ்
, செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (17:05 IST)
காவிரி நீர் தொடர்பாக,  கர்நாடகாவில் முழு அடைப்புக்கு நான் அழைப்பு விடவில்லை என்று வாட்டாள் நாகராஜ் அந்தர் பல்டி அடித்துள்ளார்.


 

 
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக, கர்நாடகாவில் வன்முறை வெடித்துள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்த ஒரு சில கன்னட அமைப்புகள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தின. இதை முதலில் ஆரம்பித்தவர் கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் ஆவார்.
 
தற்போது அந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. தமிழர்களும், அவர்களின் வாகனங்களும் குறிவைத்து தாக்கப்படுகின்றன. 
 
இந்நிலையில் விதான் சவுதாவை தனது கட்சி உறுப்பினர் முற்றுகையிட்ட முயன்ற போது அவரை போலிசார் நேற்று கைது செய்தனர். அதன் பின் அவர் விடுவிக்கப்பட்டார். 
 
சில கன்னட அமைப்புகள் நாளை பெங்களூரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் நான் தான் அழைப்பு விட வில்லை என்றும், வருகிற 15ம் தேதி நடக்கவுள்ள ரயில் மறியல் போராட்டத்திற்கு மட்டுமே அழைப்பு விடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கன்னட பெண்மணி தமிழரை மணக்க பெங்களூரு-ஹோசூர் நடைப்பயணம்