Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு?? புதிய கட்டுப்பாடுகள்! – விரைவில் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (13:51 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதை தடுக்க இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாதிப்புகள் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போதைய ஒரு நாள் பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள், கொரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற செய்தல், இல்லாவிட்டால் அபராதம் விதித்தல் போன்றவற்றையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் கொரோனா இரண்டாம் அலை கைமீறி விட்டதாக தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் இன்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனையில் மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்க பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முக்கியமாக உடற்பயிற்சி மையங்கள், பூங்காக்கள் போன்றவற்றை மூடுதல், இரவு நேரங்களில் ஊரடங்கை அமல்படுத்துதல் குறித்தும் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments