Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் கூடுதல் தளர்வுகள்; 100% அனுமதி! – மக்கள் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (09:27 IST)
கொரோனா காரணமாக தமிழகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வருகின்றன.

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பை பொறுத்து தளர்வுகள் அல்லது கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஜனவரியில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த கட்டுப்பாடுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படாமல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று முதல் திரையரங்குகள், உணவகங்கள், உடற்பயிற்சி மையங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் 100 சதவீதம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 200 பேர் வரை மட்டுமே பங்கேற்கலாம் என்ற நடைமுறை அப்படியே தொடர்கிறது. அரசியல் பொது கூட்டங்கள் நடத்த விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

ஜம்மு - காஷ்மீரில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு, கனமழை.. வைஷ்ணோ தேவி கோயிலுக்கு சென்றவர்கள் என்ன ஆனார்கள்?

பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ வழித்தடம்.. பாதுகாப்பு சான்றிதழ் சோதனை பணிகள் நிறைவு..

சென்னையின் முக்கிய சாலைக்கு நடிகர் ஜெய்சங்கர் பெயர்.. அரசாணை வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments