அடுத்த சில மணி நேரங்களில் கனமழை வாய்ப்பு! – எந்தெந்த மாவட்டங்களில்?

Webdunia
ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (09:56 IST)
தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சியால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று முதலாக மழை பொழிவு அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மாலை முதலாக பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்துள்ளது.

இந்நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் மேலும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ: எப்பேர்ப்பட்ட மழையையும் சமாளிக்கலாம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

அதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்குள் தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments