Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த சில மணி நேரங்களில் கனமழை வாய்ப்பு! – எந்தெந்த மாவட்டங்களில்?

Webdunia
ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (09:56 IST)
தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சியால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று முதலாக மழை பொழிவு அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மாலை முதலாக பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்துள்ளது.

இந்நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் மேலும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ: எப்பேர்ப்பட்ட மழையையும் சமாளிக்கலாம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

அதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்குள் தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

தொகுதி மறுசீரமைப்பு அடுத்த கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments