Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இயல்பை விட டபுள் மடங்கு பெய்த மழை! – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இயல்பை விட டபுள் மடங்கு பெய்த மழை! – வானிலை ஆய்வு மையம்!
, வியாழன், 1 செப்டம்பர் 2022 (15:11 IST)
கடந்த சில காலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் இயல்பை விட மழை அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த வாரம் முதலாகவே பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த வாரமும் கனமழை நீடித்து வரும் சூழலில் பல பகுதிகளில் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இயல்பை விட 100 சதவீதத்திற்கு அதிகமாக மழை பெய்துள்ளது.

ஆகஸ்டு மாதத்தில் மட்டும் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது 93 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. இந்த விகிதமானது கடந்த 122 ஆண்டுகளில் மூன்றாவது உச்சப்பட்ச மழை அளவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5ஜி விரைவில் சென்னையில் - உங்கள் மொபைலில் அது வேலை செய்யுமா?