இன்று 15 மாவட்டங்களில் செம மழை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (08:16 IST)
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சற்று காலதாமதாமாக நேற்று முதலாக வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று முதலாகவே தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நவம்பர் 4ம் தேதி வரை பல பகுதிகளிலும் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி இன்று, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகலிலும், புதுச்சேரியின் சில பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments