Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை!- வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை!- வானிலை ஆய்வு மையம்!
, திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (13:07 IST)
வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த சில நாட்களாக பல மாநிலங்களிலும் நல்ல மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்திலும் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது.

பருவமழையால் தமிழக நீர்நிலைகள் தற்போது முழுவதுமாக நிரம்பியுள்ளன. இந்நிலையில் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை தொடர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று முதலாக நல்ல மழை பெய்துள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு ஆங்காங்கே சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலியுடன் லாட்ஜில் உல்லாசமாக இருந்த சிறைக்கைதி: உடந்தையாக இருந்த 3 காவலர்கள் மீது நடவடிக்கை!