Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குனி வெயிலுக்கு நடுவே பரவலாக மழை! – மக்கள் மகிழ்ச்சி!

பங்குனி வெயிலுக்கு நடுவே பரவலாக மழை! – மக்கள் மகிழ்ச்சி!
, திங்கள், 12 ஏப்ரல் 2021 (08:53 IST)
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி வெப்பம் வாட்டி வரும் நிலையில் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வழக்கத்தை விட 2 அல்லது 3 டிகிரி வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில் அனல்காற்றும் வீசுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முதலாக தமிழகத்தில் சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர் பகுதிகளில் மிதமான அளவு மழை பெய்ததால் சூடு தணிந்தது. அதேபோல புதுக்கோட்டையில் அறந்தாங்கி, விராலிமலை, ஆலங்குடி, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விண்வெளிக்கு செல்லும் முதல் அரபு பெண்! வரலாற்றில் ஒரு சாதனை!