Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 இடங்களில் சதமடித்த வெயில்; மெல்ல குறைய வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (11:57 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மெல்ல குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மதுரை, காஞ்சிபுரத்தில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருச்சி, அரியலூரில் 106 டிகிரியும், சேலத்தில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இதேபோல் தருமபுரி, கோவில்பட்டி, பெரியகுளம், திருத்தணி, நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளிலும் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி இருந்துள்ளது.

இந்நிலையில் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் இருந்து காற்று வீச வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் பல பகுதிகளில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

வக்பு மசோதா நிறைவேற்றம்.. அடுத்த டார்கெட் கிறிஸ்துவர்கள் தான்: ராகுல் காந்தி

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலையா? இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!

இனி எந்த கோர்ட்டுக்கு போனாலும் செல்லாது: வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments