Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா மையங்களாக மாறும் கல்லூரிகள் – அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை!

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (08:07 IST)
தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கும் சென்னையில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை தங்கவைப்பதற்காக 19 கல்லூரிகள் தயாராவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்திலேயே அதிகமான கொரோனா பாதிப்பை சந்தித்துள்ள மாவட்டமாக சென்னை உள்ளது. அங்கு இதுவரை 23,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் கூடிய விரைவில் மருத்துவமனைகளில் இட நெருக்கடி ஏற்படலாம் என தெரிகிறது. மேலும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோரும் சென்னையில் உள்ள கல்லூரிகள் மற்றும் தனியார் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்படுகின்றனர்.

இதையடுத்து 19 கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளை கொரோனா மையங்களாக மாற்றத் தமிழக சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த கல்லூரிகளில் கொரோனா அறிகுறி உள்ளவர்களையும், லேசான பாதிப்பு உள்ளவர்களையும் அனுமதித்துவிட்டு, தீவிர பாதிப்புக்கு ஆளானவர்களை மட்டும் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை அளிக்க அழைத்துச் செல்லும் முடிவில் இருப்பதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

இதுதான் ரோடு போட்ட லட்சணமா? பல்லிளித்த NH-66 சாலையின் முக்கிய பகுதி.. NHAI அதிரடி நடவடிக்கை..!

டிரம்ப் தான் அமெரிக்க அதிபர், ஆனால் அவர் போட்ட சட்டை நெதன்யாகுடையது: சிவசேனா கிண்டல்..!

ஈபிஎஸ் முதல்வர்.. விஜய், திருமாவளன் துணை முதல்வர்கள்.. பேச்சுவார்த்தை தீவிரம்.. பரபரப்பு தகவல்..!

ஜூன் 28 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு, வெயிலும் தொடரும்.. வானிலை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments