Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யானைகள் வழித்தடத்தை ஈஷா யோகா மையம் ஆக்கிரமிக்கவில்லை! – தமிழக அரசு பதில்!

Advertiesment
Tamilnadu
, திங்கள், 13 டிசம்பர் 2021 (09:29 IST)
கோவையில் யானைகள் வழித்தடத்தில் ஈஷா யோகா மையம் கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் ஈஷா யோகா மையம் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோவையில் ஈஷா யோகா மையத்தின் தியான மையம் மிகப்பெரிய சிலையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த யோகா மையம் உள்ள பகுதி காட்டை அழித்து உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு, ஈஷா யோகா மையம் காட்டு நிலப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்படவில்லை என்றும், மேலும் ஈஷா யோகா மையம் அமைந்துள்ள பகுதியில் யானைகளின் வழித்தடம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபஞ்ச அழகி போட்டியில் பட்டம் சூட்டிய இந்திய பெண்! – குவியும் வாழ்த்துகள்!