Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 வருஷத்துல சீமை கருவேல மரமே இருக்காது..! – தமிழக அரசு அதிரடி!

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (10:04 IST)
தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்த 10 ஆண்டுகளில் சீமை கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீமை கருவேல மரங்கள் தண்ணீரை அதிகளவில் உறிஞ்சுவதுடன், காற்றின் ஈரபதத்தையும் ஈர்ப்பதால் அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அரசும் அவ்வபோது கருவேல மரங்களை அகற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சீமை கருவேல மரங்களை அகற்ற கோரிய வழக்கு ஒன்றில் தமிழ்நாடு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், முதற்கட்டமாக ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம் உள்ளிட்ட 200 ஹெக்டேர் பரப்பளவில் கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சீமை கருவேல மரங்களை படிப்படியாக அடுத்த 10 ஆண்டுகளுக்குள் முழுமையாக அகற்ற கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கடுத்த 5 ஆண்டுகள் அவை மீண்டும் வளராமல் கண்காணிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments