குடும்ப கட்டுப்பாடு; பெண் இறந்தால் ரூ.4 லட்சம்! – தமிழக அரசு விளக்கம்!

Webdunia
சனி, 16 ஜூலை 2022 (13:13 IST)
அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்யும்போது பெண் இறந்தால் வழங்கப்படும் இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் ஒருவர் அதற்கு பின் கர்ப்பமானதால் ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குடும்ப கட்டுப்பாடு மற்றும் அதுதொடர்பாக வழங்கப்படும் இழப்பீடுகள் குறித்து விளக்கமளித்த தமிழக அரசு “அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்யும்போது பெண் இறந்தால் வழங்கப்படும் இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கருத்தடை செய்த பின் ஒரு மாத காலத்திற்குள் இறந்தால் தரப்படும் இழப்பீடு தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் முடிவு.. அதிர்ச்சியில் பணியாளர்கள்..!

பகல் 1 மணி வரை மழை பெய்யும் மாவட்டங்கள்: வானிலை ஆய்வு மையத்தின் அப்டேட்..!

சற்றுமுன் வெளியான தகவல்.. தீவிர புயலாக மாறிய மோன்தா.. 5 மாவட்ட மக்கள் ஜாக்கிரதை..!

சென்னையில் விடிய விடிய மழை.. இன்றும் தமிழகம் முழுவதும் மழை பெய்யும்.. ரயில், விமானங்கள் மாற்றம்..!

மோன்தா புயல் எங்கே, எப்போது கரையைக் கடக்கிறது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments