Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆவணங்களை ஒப்படைக்காத பொன்.மாணிக்கவேல்! – வழக்கு தொடர்ந்த தமிழக அரசு!

ஆவணங்களை ஒப்படைக்காத பொன்.மாணிக்கவேல்! – வழக்கு தொடர்ந்த தமிழக அரசு!
, வியாழன், 5 டிசம்பர் 2019 (13:06 IST)
சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்காத பொன்.மாணிக்கவேல் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை சுப்ரீம் கோர்ட்டு பதவி நீட்டிப்பு செய்தது. அவரது பதவிக்காலம் கடந்த நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை அவர் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிலை கடத்தல் பிரிவு உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில் ஆவணங்களை தற்போது வரை அரசிடம் ஒப்படைக்காமல் பொன்.மாணிக்கவேல் காலவிரயம் செய்வதாக கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் அதிகார வரம்புக்கு மீறி ஆவணங்களை வைத்திருப்பதால் தமிழக அரசு பொன்.மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கௌ தொடர்ந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உள்ளாட்சி தேர்தலில் குழப்பம்?? உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்வி..