Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜூன் 12 ல் மேட்டூர் அணை திறப்பு… முதல்வர் அறிவிப்பு!

ஜூன் 12 ல் மேட்டூர் அணை திறப்பு… முதல்வர் அறிவிப்பு!
, வியாழன், 3 ஜூன் 2021 (13:28 IST)
இந்த மாதம் 12 ஆம் தேதி முதல் மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

காவிரி டெல்டா பாசன விவசாயத்திற்காக வருடந்தோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி  பாசனத்துக்காக நீர் திறக்கப்படும் என அறிவித்துள்ளது தமிழக அரசு. தற்போதைய நீர்மட்டம் 97.13 அடியாகவும், நீர் இருப்பு 61.43 டிஎம்சியாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எழுத்தாளர்களுக்கு அரசு செலவில் வீடு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!