Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சளி, இறுமல் இருந்தால் வேலைக்கு போகக் கூடாது! – அரசின் புதிய கட்டுப்பாடுகள்!

Webdunia
ஞாயிறு, 7 ஜூன் 2020 (09:58 IST)
தமிழகத்தில் வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் குறைவாக இருந்தாலும், சில மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டு கடைகள், அங்காடிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, வணிக நிறுவனங்கள், அங்காடிகளில் கண்டிப்பாக ஊழியர்கள் அனைவரும் முக்கவசம், கையுறை அணிய வேண்டும்.

அனைத்து கடைகளின் முகப்பிலும் சானிட்டைசர், கிருமி நாசினி பாட்டில்கள் வைக்கப்பட வேண்டும்.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் உள்ளே அனுமதிக்கக் கூடாது.

வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.

ஊழியர்கள் யாருக்காவது சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் வேலைக்கு செல்லக் கூடாது.

இவ்வாறு பல்வேறு முக்கியமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments