Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒடிசாவுக்கு 10 கோடி நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு !

Webdunia
திங்கள், 6 மே 2019 (09:06 IST)
ஃபானி புயலால் வரலாறு காணாத அளவுக்கு சேதங்களை எதிர்க்கொண்டு வரும் ஒடிசா மக்களுக்கு தமிழக அரசு சார்பாக 10 கோடி ரூபாய் நிவாரண நிதியாக அளிக்கப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஃபானிப் புயல் ஒடிசாவில் கரையைக் கடந்துள்ளது. சூறாவளிக்காற்றும் புயல்மழையும் அங்கு ஏகப்பட்ட சேதங்கள் ஏற்படுத்தியுள்ளன. ஆனால் ஒடிசா மாநில அரசு சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பெரும் அளவிலான உயிர்ச்சேதத்தை தடுத்துள்ளது. இப்போது புயல் கரையைக் கடந்துள்ள நிலையில் சீரமைப்புப் பணிகளையும் வேகமாக மேற்கொண்டு வருகிறது. பல பகுதிகளில் மின்சாரம் முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் பலர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றன. மேலும் மொபைல் மற்றும் இணைய சேவைகள் முடங்கியுள்ளன.

இதைத் தொடர்ந்து ஒடிசா அரசு சீரமைப்ப்புப் பணிகளை மிக வேகமாக நடத்தி வருகிறது. மத்திய அரசு ஒடிசாவுக்கு அவசர நிதியாக ரூபாய் 1000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதையடுத்து தமிழக அரசின் சார்பாக ஒடிசா அரசுக்கு 10 கோடி ரூபாய் நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.  தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கையில் ‘ ஒடிசாவில் புயல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தமிழக அரசு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறத்யு. மக்களின் துய்ரத்தில் பங்கு கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் வழங்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments