Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலெக்‌ஷன் நெருங்கி வருது, அரசியல் கூட்டத்துக்கு அனுமதி! – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (09:46 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாதாமாதம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகள், விளையாட்டு, கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் கொரோனா அபாயம் கருதி வழங்கப்பட்ட அனுமதி திரும்ப பெறப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் டிசம்பர் 19 முதல் அரசியல், மத நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை திறந்த வெளியில் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திறந்தவெளியின் அளவு பொறுத்து அதில் கொள்ளக்கூடிய மொத்த நபர்களின் எண்ணிக்கையில் 50% பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments