Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கையிலிருந்து தமிழகம் வந்த 47 மீனவர்கள்! – உறவினர்கள் மகிழ்ச்சி!

இலங்கையிலிருந்து தமிழகம் வந்த 47 மீனவர்கள்! – உறவினர்கள் மகிழ்ச்சி!
, வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (12:49 IST)
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 47 மீனவர்கள் இன்று தமிழகம் வந்தடைந்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் வங்க கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டிணம், புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததுடன் படகுகளையும் பறிமுதல் செய்தது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமர் மோடி இலங்கை அரசுக்கு கடிதமும் எழுதினார். இந்நிலையில் சமீபத்தில் அவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி விடுவிக்கப்பட்ட 47 மீனவர்கள் விமானம் மூலமாக கொழும்பிலிருந்து தமிழகம் அனுப்பப்பட்டனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று பத்திரமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை !