Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தமிழகத்தில் 12வது தடுப்பூசி முகாம்! – 50 ஆயிரம் மையங்களில் ஏற்பாடு!

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (08:38 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பை குறைக்க தமிழக அரசின் 12வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கடந்த செப்டம்பர் மாதம் முதலாக தமிழக அரசு கொரோனா தடுப்பூசி முகாமை வாரம்தோறும் நடத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழகத்தின் 12வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. தமிழக அரசிடம் 1 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ள நிலையில் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதுவரை 77.02 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 41.60 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்கு பிறகு இனி வாரம் ஒருமுறை மட்டுமே தடுப்பூசி முகாம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments