Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் 4 கோடியை தாண்டிய தடுப்பூசி செலுத்தியவர்கள் – புதிய சாதனை!

தமிழகத்தில் 4 கோடியை தாண்டிய தடுப்பூசி செலுத்தியவர்கள் – புதிய சாதனை!
, ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (12:19 IST)
தமிழகத்தில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில் மொத்த தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தடுப்பூசி விரைவாக எடுத்துக் கொள்ள கடந்த 12ம் தேதி தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 23 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் அதை தொடர்ந்து இன்று மீண்டும் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இந்த முறை 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

காலை 11 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகம் முழுவதும் 3.96 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!