Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்வை தமிழக காங்கிரஸ் புறக்கணிப்பு…. செல்வ பெருந்தகை அறிவிப்பு!

செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்வை தமிழக காங்கிரஸ் புறக்கணிப்பு…. செல்வ பெருந்தகை அறிவிப்பு!
, வியாழன், 28 ஜூலை 2022 (10:04 IST)
இன்று தொடங்க உள்ள 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழாவை காங்கிரஸ் புறக்கணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரமாக செய்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சென்னை வரவுள்ளார் என்பதும் தொடக்கவிழா நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

இந்நிலையில் வழக்கம்போல மோடி வரும் போது #gobackmodi போன்றவை ட்ரண்டாகி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று நடக்கும் தொடக்க விழா நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதால் புறக்கணிக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று ஒரே நாளில் 256 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை: மேலும் உயருமா?