Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாட்டாள் நாகராஜ் தலைமையில் திடீர் போராட்டம்: ஓசூரில் பேருந்துகள் நிறுத்தம்

வாட்டாள் நாகராஜ் தலைமையில் திடீர் போராட்டம்: ஓசூரில் பேருந்துகள் நிறுத்தம்
, திங்கள், 12 ஜூன் 2017 (05:50 IST)
கர்நாடக மாநில விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வது, மேகதாது அணை கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கர்நாடகத்தில் முழு அடைப்பு நடைபெறுகிறது. இந்த முழு அடைப்புக்கு வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகள் உள்பட பல அமைப்புகள் பங்கேற்கின்றன.



 


இதன் காரணமாக கர்நாடகா செல்லும் தமிழக அரசு பேருந்துகள் எல்லைப் பகுதியான ஒசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.  பாதுகாப்பு காரணங்களுக்காகவே தமிழக பேருந்துகள் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதேசமயம் கர்நாடக மாநில அரசு பேருந்துகள் வழக்கம் போல் தமிழகத்திற்குள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு காவிரி போராட்டத்தின் போது, தமிழக அரசுப் பேருந்துகள் கர்நாடகாவில் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒசூரில் பேருந்துகள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜி.எஸ்.டி வரியால் குறைகிறது சினிமா டிக்கெட்டுக்கள்