Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி தோல்வி அடைவார் என்று கூறிய வைகோவுக்கு நன்றி! தமிழிசை

Webdunia
ஞாயிறு, 30 டிசம்பர் 2018 (20:37 IST)
கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் முதலில் இணைந்தது வைகோவில் மதிமுக தான். அதேபோல் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தவுடன் பதவியேற்கும் முன்னரே அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியதும் மதிமுகதான்

இந்த நிலையில் தற்போது திமுக கூட்டணியில் இருப்பதாக கூறிக்கொள்ளும் வைகோ, பிரதமர் மோடியையும் பாஜக ஆட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடி தோல்வி அடைவார் என்று அவர் ஒவ்வொரு மேடையிலும் பேசி வருகிறார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'பிரதமர் மோடி படுதோல்வியடைவார் எனக்கூறிய வைகோவுக்கு நன்றி என்றும், அவருடைய பேச்சு எப்போதுமே எதிர்மறையாகத்தான் இருக்கும் என்றும், தமிழகத்தில் மக்கள் நம்பும் ஒரே கட்சி பாஜக மட்டும்தான் என்றும் கூறியுள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்காந்த் தான் முதல்வர் ஆவார் என்று வைகோ முழங்கியதும், விஜய்காந்த் உள்பட அந்த கூட்டணியில் உள்ள ஒருவரும் வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments