Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாகம் செய்தாலும், யோகா செய்தாலும் கேலி கிண்டல்... தமிழிசை அப்செட்!

Webdunia
திங்கள், 24 ஜூன் 2019 (08:41 IST)
எதிர்கட்சியினருக்கு யாகம் செய்தாலும், யோகா செய்தாலும் கேலி கிண்டல்தான் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 
 
பாரதிய ஜனசங்க நிறுவனர் ஷியாம பிரசாத் முகர்ஜியின் 66 வது நினைவு நாளையொட்டி, தமிழிசை சவுந்தரராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார்.
 
தமிழிசை பேசியதாவது, மழை பொய்த்ததால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க நடவடிக்கை ஒருபுறம் எடுத்தாலும் இன்னொரு புறத்தில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது. அதன் விளைவாகவே மழை பெய்தது. 
திமுகவினர் யாகம் நடத்தினாலும், யோகா நடத்தினாலும் கேலி செய்கிறார்கள். ஆனால் தண்ணீருக்காக போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டம் நடத்தினால் மட்டும் தண்ணீர் வந்துவிடுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். 
 
அதிமுகவினர் யாகம் நடத்தியதால்தான் தமிழகத்தில் மழை பெய்தது எனும் தமிழிசையின் கருத்தை சமூக வலைத்தளங்களில் வழக்கம் போல் கேலி செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments