Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறாரா தமிழிசை? அவரே அளித்த விளக்கம்..!

Webdunia
ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (12:39 IST)
தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

மேலும் அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட போவதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த விளக்கத்தில், ‘நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என்ற செய்தி தவறானது. மேலிட உத்தரவு என்னமோ அதைத்தான் நான் செய்து வருகிறேன். நான் எப்போதும் மக்களுக்காக இருப்பேன். பிரதமர் மோடி மற்றும் ஸ்ரீ ராமரின் தயவால் நான் எனது மனசாட்சிப்படி பணியாற்றி வருகிறேன்.  

எனவே கவர்னர் பதவியை ராஜினாமா செய்வேன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments