Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சனாதனத்தை எதிர்ப்பவர்களுக்கு அதுகுறித்த புரிதல் இல்லை: தமிழிசை செளந்திரராஜன்..!

சனாதனத்தை எதிர்ப்பவர்களுக்கு அதுகுறித்த புரிதல் இல்லை: தமிழிசை செளந்திரராஜன்..!
, திங்கள், 4 செப்டம்பர் 2023 (16:07 IST)
சனாதனத்தை எதிர்ப்பவர்களுக்கு அது குறித்த புரிதல் இல்லை என புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 
 
சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அவருக்கு பாஜக உட்பட ஒரு சில கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன 
 
இந்த நிலையில் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த போது ’சனாதனத்தை அழிக்க முடியாது என்றும் அது ஒரு வாழ்வியல் முறை என்றும் தெரிவித்தார். 
 
சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்ல சொல்ல அது மேலும் மேலும் வளரும் என்று கூறிய தமிழிசை  சனாதனத்தை எதிர்ப்பவர்களுக்கு அது குறித்த புரிதல் இல்லை என்று கூறினார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

9 ஆண்டுகளாக ஒருநாள் கூட விடுப்பு எடுக்காத பிரதமர் மோடி