Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்சென்னையில் தமிழிசை தேறுவாரா? கடைசி கட்ட நிலவரம் என்ன?

Siva
புதன், 17 ஏப்ரல் 2024 (15:45 IST)
தென்சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிடும் நிலையில் கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அவரது நிலவரம் என்ன என்பதை பார்ப்போம்.

தென் சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக சார்பில் ஜெயவர்தன் மற்றும் பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் என மும்முனை போட்டி நடைபெற்றுள்ளது

மூவரும் மிகவும் தீவிரமாக கடந்த சில நாட்களாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் தென்சென்னை தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழிசை சௌந்தரராஜன் குடியிருப்பது என்பது ஒரு பிளஸ் பாயிண்ட் ஆக இருந்தாலும் இந்த தொகுதியில் மாறி மாறி திமுக அதிமுக மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்ற அனுதாபமும் மக்கள் மத்தியில் இருப்பதாக தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு கூட்டணி பலம் இருப்பதால் அவர் எளிதில் வெற்றி பெறுவார் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் இரண்டாம் இடத்திலும் ஜெயவர்தன் மூன்றாம் இடத்துக்கும் தள்ளப்படுவார் என்று கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர்ந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை.. சென்னையில் இன்றைய நிலை என்ன?

சொத்துக்குவிப்பு புகார்: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் கைது..!

NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! புதிய தேதி அறிவிப்பு..!

ஐஐடி இயக்குனர் காமகோடிக்கு கோமியம் அனுப்பி போராட்டம்.. திராவிட தமிழர் கட்சியினர் அதிரடி..!

கஞ்சா செடி வளர்க்க மாநில அரசு அனுமதி.. ஆனால் ஒரு நிபந்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments