Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக உரிமையை யாரிடமிருந்து பெறப்போகிறார் தமிழிசை?

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (17:11 IST)
தமிழகத்தின் உரிமையை பெற்றுத்தர முழுமையான ஈடுபாட்டுடனும், ஆதரவுடனும் தமிழக பாஜக இருக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

 
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை கூறியதாவது:-
 
கட்சிகளின் எல்லை கடந்து அத்தனை தலைவர்களும் தமிழகத்தின் நலனுக்காக அக்கறையுடன் கலந்து கொண்ட கூட்டம். தமிழக பாஜக, தமிழகத்தின் உரிமையை பெற்றுத்தர முழுமையான ஈடுபாட்டுடனும், ஆதரவுடனும் இருக்கும் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறேன். 
 
காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசின் தீர்ப்பாக கருத முடியாது. கர்நாடக அரசு இதுவரை நமக்கு முழுமையாக 50 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் திறந்துவிட்டது கிடையாது. இன்று நமது உரிமை நிலைநாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் உரிமையை பாதுகாப்பத்தில் தமிழக பாஜக உறுதியோடு இருக்கும் என்று கூறியுள்ளார்.
 
காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக தமிழக பாஜக களமிறங்கியது வரவேற்க வேண்டிய ஒன்றாக இருந்தாலும், தமிழிசை கூறியது போல் தமிழகத்தின் உரிமையை யாரிடம் இருந்து பெற்றுத்தர போகிறார் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதம் ஏற்படுவதில் மத்திய அரசுக்கும் பங்கு உள்ளது. தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், மத்திய அரசு இந்த விவகாரத்தில் முனைப்பு காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

மகிழ்ச்சி மற்றும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸ்..!

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments