Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையில் பாலமாக செயல்படுவேன் – தமிழிசை உறுதி !

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (08:31 IST)
தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையே பாலமாக செயல்படுவேன் என முன்னாள் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜகவின் முகமாக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட பின் பாஜக தமிழக தலைவர் பதவியையும் பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். அவர் தெலங்கானா ஆளுநராக வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி பதவியேற்பார் எனத் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை ’ தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் பாலமாகச் செயல்படுவேன். தமிழ் மகளாகவும் தெலுங்கிசையாகவும் தேசியத்தின் குரலாக ஒலிப்பேன். தெலங்கானா அதிகாரிகளை சந்தித்த பின் பதவியேற்பு விழாப் பற்றித் தெரியும். அரசியல் களத்திலிருந்து வெளியேறவில்லை. அரசியலமைப்பு சட்டத்துக்குட்பட்டுச் செயல்படவுள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தமிழிசைக்கு அடுத்து தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படுவார் என்ற கேள்வி தமிழக அரசியல் சூழலில் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments