Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையில் பாலமாக செயல்படுவேன் – தமிழிசை உறுதி !

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (08:31 IST)
தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையே பாலமாக செயல்படுவேன் என முன்னாள் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜகவின் முகமாக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட பின் பாஜக தமிழக தலைவர் பதவியையும் பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். அவர் தெலங்கானா ஆளுநராக வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி பதவியேற்பார் எனத் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை ’ தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் பாலமாகச் செயல்படுவேன். தமிழ் மகளாகவும் தெலுங்கிசையாகவும் தேசியத்தின் குரலாக ஒலிப்பேன். தெலங்கானா அதிகாரிகளை சந்தித்த பின் பதவியேற்பு விழாப் பற்றித் தெரியும். அரசியல் களத்திலிருந்து வெளியேறவில்லை. அரசியலமைப்பு சட்டத்துக்குட்பட்டுச் செயல்படவுள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தமிழிசைக்கு அடுத்து தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படுவார் என்ற கேள்வி தமிழக அரசியல் சூழலில் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments