Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவர் காருக்காக அரசியல்....... நாஞ்சில் சம்பத் மீது தமிழிசை கடும் தாக்கு

அவர் காருக்காக அரசியல்....... நாஞ்சில் சம்பத் மீது தமிழிசை கடும் தாக்கு
, வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (11:15 IST)
அவர் கொள்கைக்காக அரசியல் நடத்தும் அரசியல்வாதி இல்லை, காருக்காக அரசியல் நடத்துபவர் என தமிழிசை நாஞ்சில் சம்பத்தை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.


 

 
தினகரன் அணியில் இருக்கும் நாஜ்சில் சம்பத், ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணியினரை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். பாஜக தலைவர் தமிழிசை குறித்து அவதூறாக பேசியதாக பாஜக நிர்வாகிகள் சம்பத் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் பல்லடத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை நாஞ்சில் சம்பத்தை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். அவர் கூறியதாவது:-  
 
நாஞ்சில் சம்பத் தொடர்ந்து பாஜகவை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அவர் கொள்கைக்காக அரசியல் நடத்தும் அரசியல்வாதி இல்லை. காருக்காக அரசியல் நடத்துபவர். மேலும் அவரை பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

99 சதவீத பணம் வங்கியில் டெபாசிட்; பண மதிப்பிழப்பால் பயனில்லை