Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட பெண் பயணி : சண்டைக்குப் போன தமிழிசை

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (15:49 IST)
தூத்துக்குடி விமானத்தில் பாஜகவிற்கு எதிராக முழக்கமிட்ட பெண் பயணியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
திருநெல்வேலியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழிசை சவுந்தரராஜன் இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார்.
 
விமானம் சென்று கொண்டிருந்த போது, தமிழிசையை கண்ட ஒரு பெண் பயணி ‘பாசிச பாஜக ஆட்சி ஓழிக’ என பாஜகவிற்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினார். இதைப்பார்த்து, தமிழிசையும், விமானத்தில் இருந்த பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இதனால் கோபமடைந்த தமிழிசை அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விமானம் தூத்துக்குடி சென்றடைந்த பின், விமான நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழிசை புகார் அளித்தார். ஏதோ ஒரு அமைப்பின் தூண்டுதலின் பேரில் அந்த பெண் தனக்கு எதிராக முழக்கம் எழுப்பியியதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். அப்பெண்ணின் பெயர் சோபியா என்பது தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments