Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரிலிருந்து கீழே விழுந்த தமிழிசை: பாஜக தொண்டர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2019 (08:17 IST)
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தூத்துகுடி விமான நிலையம் வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து காரில் ஏறும்போது தவறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் தூத்துகுடியில் மாணவி ஷோபியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழிசை நேற்று மீண்டும் தூத்துகுடி வந்தார். விமான நிலையத்தில் இருந்து காருக்கு செல்லும் வழியில் செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் காரி ஏற முயன்ற தமிழிசை எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்து தொண்டர்கள் கீழே விழுந்த தமிழிசையை கைத்தாங்கலாக தூக்கினர். அதன்பின் அவர் காரில் ஏறி சென்றார். இந்த சம்பவத்தால் தூத்துகுடி விமான நிலையம் அருகே சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

காரில் இருந்து கீழே விழுந்த தமிழிசைக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்று பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர். செய்தியாளர்கள் தொடர்ந்து விரட்டி விரட்டி கேள்வி கேட்டதால் அவசர அவசரமாக காரில் ஏறியதால்தான் தமிழிசை கீழே விழுந்தார் என்றும் நிர்வாகிகள் விளக்கமளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments