Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழர்களின் பாரம்பரியம்; ஆதிச்சநல்லூரில் இருந்த பொருட்களின் காலம் பற்றிய தகவல்

தமிழர்களின் பாரம்பரியம்; ஆதிச்சநல்லூரில் இருந்த பொருட்களின் காலம் பற்றிய தகவல்
, வியாழன், 4 ஏப்ரல் 2019 (16:36 IST)
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 2 பொருட்களின் கார்பன் சோதனை முடிவு வெளியிடப்பட்டுள்ளது.  ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த வேண்டும் என்று கோரி தூத்துக்குடி காமராஜ் என்பவர் தொடுத்த வழக்கில் இன்று மத்திய மாநில அரசிகளுக்கு உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்களில் ஒன்று கிமு. 905 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை, மற்றொன்று  கிமு. 971, ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கார்பன் பரிசோதனை அடிப்படையில் அகழாய்வு பணியை இன்மேல்  யார் மேற்கொள்வார்கள் என கேள்வி இன்று எழுப்பப்பட்டது.
 
ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பான வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் கிளையில் மத்திய அரசு தகவல் அளித்தது.
 
இதனையடுத்து அகழாய்வு பணியை மத்திய அரசு மேற்கொள்ளுமா அல்லது மாநில அரசு மேற்கொள்ள அனுமதி வழங்குமா தொல்லியல் துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமேதி மக்களை ராகுல் அவமானப்படுத்தியுள்ளார் – ஸ்மிருதி ராணி தாக்குதல் !