ஆட்சிக்கு வந்த திமுக: மீண்டும் மாறுகிறதா தமிழ் புத்தாண்டு?

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (14:33 IST)
பொங்கல் பரிசு பையில் ’இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்’ என அச்சிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
பொங்கல் பண்டிகையின் போது நியாய விலைக் கடைகளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொடுக்கவுள்ள 20 இலவச பொருட்கள் வழங்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த பொருட்களை வைத்து கொடுக்கப்படும் துணிப் பையில், ‘இனிய தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்’ என அச்சிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. 
 
இதனால் மீண்டும் மாறுகிறதா தமிழ் புத்தாண்டு தேதி எனும் சந்தேகம் எழுந்துள்ளது. ஆம், கடந்த 2008 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தை மாதம் 1 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சித்திரை மாதம்தான் தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தார். 
 
ஆனால் இப்போது திமுக ஆட்சிக்கு வந்திருப்பதாலும் பொருட்களை வைத்து கொடுக்கப்படும் துணிப் பையில் குறிப்பிடப்பட்டுள்ளதாலும் தமிழ் புத்தாண்டு தேதி மாறுகிறதா என சந்தேகம் கிளம்பியுள்ளது. இது குறித்து அரசு இன்னும் ஏதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 
 
ஆனால், 2022 ஆம் ஆண்டுக்கான அரசின் பொது விடுமுறை தேதிகளில் சித்திரை மாதம் 1 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் கன மழையை எதிர்த்து மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

டிட்வா புயல் நகராமல் அருகே ஒரே இடத்தில் மையம்; அடுத்த 12 மணி நேரத்தில் என்ன நடக்கும்?

இன்று சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.. வானிலை எச்சரிக்கை..!

சென்னையில் இரண்டாவது நாளாக கனமழை: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்..!

நடுவழியில் திடீரென நின்ற சென்னை மெட்ரோ ரயில்.. பயணிகள் மத்தியில் பதட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments