Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிக்கொண்டே இருக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (08:13 IST)
வங்க கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகிக்கொண்டே இருக்கும் என்பதால் அடுத்த 25 முதல் 30 நாட்களுக்கு தீவிர மழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

அடுத்த 25 முதல் 30 நாட்களுக்கு வங்க கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் சென்னை முதல் நாகை வரையிலான கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் டிசம்பர் இரண்டாம் தேதி வரை மழை இருக்கும் என்றும்  தெரிவித்துள்ளார்.  

நாகை முதல் சென்னை வரையிலான பகுதிகள் தான் மழைக்கான ஹாட்ஸ்பாட் பகுதி என்றும் இங்கு மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

நவம்பர் 14ஆம் தேதி முதல் மழை தீவிரமாகும் என்றும் நவம்பர் 14, 15 ஆகிய இரண்டு நாட்களும் மிக கனமழை பெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  நாகை. மயிலாடுதுறை. காரைக்கால். புதுச்சேரி, கடலூர். விழுப்புரம்.  செங்கல்பட்டு. சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் உள்ள கடலோர பகுதிகளில் கன மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments