அடுத்த 5 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்: வெய்யில் கொளுத்தும்: வானிலை எச்சரிக்கை!

Mahendran
திங்கள், 21 ஏப்ரல் 2025 (15:32 IST)
தமிழகத்தில் வரும் ஐந்து நாட்களில் வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் முதியவர்கள், குழந்தைகள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசையிலிருந்து வீசும் காற்றுகள் சந்திக்கும் நிலை தற்போது நிலவுகிறது. இதன் தாக்கமாக ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 27 வரை தமிழகத்தின் சில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடிகாற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 
அதே நேரத்தில், அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு குறைவாகவே உள்ளது. எனினும், சில இடங்களில் வெப்பம் சற்று அதிகரிக்கலாம்.
 
மேலும், அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை சாதாரண நிலையை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். இதனால், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
 
சென்னை குறித்து சொல்வதானால், இன்று  வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம். நாளையும் இதேபோன்ற வானிலை நிலவ வாய்ப்பு உள்ளது.
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments