Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு தேடி வரும் ரேசன் பொருட்கள்: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு..!

Mahendran
புதன், 19 மார்ச் 2025 (11:07 IST)
தமிழகத்தில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாக இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
 
சட்டப்பேரவையில், இன்று இது குறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் வீடுகளுக்கே நேரடியாக சென்று நியாயவிலை பொருள்களை விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
 
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களில் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது போல், தமிழ்நாட்டிலும் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அதிகாரிகளை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
 
ஏற்கனவே புதுச்சேரியில், ரேஷன் கடை இல்லாத பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மட்டும் நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என புதுவை முதல்வர் ரங்கசாமி இன்று காலை அறிவித்துள்ளார். இதன் பின்னணியில், தமிழகத்திலும் அதே நாளில் இது போன்ற ஒரு அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments