Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பருவமழை இன்னும் பென்டிங் இருக்காம் மக்களே!!

Advertiesment
பருவமழை இன்னும் பென்டிங் இருக்காம் மக்களே!!
, வியாழன், 2 ஜனவரி 2020 (18:03 IST)
வட கிழக்கு பருவமழையின் காரணமாக ஜனவரி 6 ஆம் தேதி வரை மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வானிலை ஆய்வு மையம் மழை குறித்து வெளியிட்ட விரிவான தகவல் பின்வருமாறு... வழக்கமாக வட கிழக்கு பருவமழை டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்துவிடும். ஆனால் காற்றின் வேகமாறுபாடு காரணமாக சில தினங்கள் மழை அதிகரித்துள்ளது. ஜனவரி 6 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. 
 
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்ப நிலை 23 டிகிரி செல்சியஸும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புத்தாண்டில் டாஸ்மாக் விற்பனை மந்தம்: தேர்தல் காரணமா?