Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை முதல் 17ஆம் தேதி வரை மழை!

நாளை முதல் 17ஆம் தேதி வரை மழை!
, செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (14:06 IST)
நாளை முதல் 17ஆம் தேதி வரை தமிழ்நாட்டில், புதுச்சேரி, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு.


தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே தென்மேற்கு பருவமழையால் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

இதனால் தமிழகத்தில் மேலும் பல பகுதிகளில் கனமழை நீடிக்கும் நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறையும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் காற்றழுத்த தாழ்வு மாற்றங்கள் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று முதல் 15 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என கூறப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து மேற்கு திசை காற்றின் வேக மாறுபட்டால் இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை முதல் 17ஆம் தேதி வரை தமிழ்நாட்டில், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதோடு சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என   தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாகனம் ஒட்டும் போது செல்போன் பயன்படுத்தக்கூடாது.-ஐபிஎஸ் அதிகாரி வெளியிட்ட வீடியோ